About us

பெதஂதரணேஷ்வரர் - பெரியநாயகி ஆலயம்

அனைத்து மக்களும் இனபாகுபாடின்றி குலதெய்வ ஆலயமாக ஏற்று வணங்கும் ஆலயம் இது. இந்த ஆலயத்தில் மகாவிஷ்னுவின் அவதாரமாக பெதஂதரணேஷ்வரர். சிவனின் அவதாரமாக உத்தண்டராயரும் கோயில்கொண்டு அருள்பாலிப்பதால் இந்த ஆலயத்தில் வணங்குவது சிவாலயம் மற்றும் வைஷ்னவ ஆலயத்தில் வணங்கும் பாக்யம் கிட்டும். இந்த ஆலயத்தில் எல்லா தெய்வங்களும் உள்ளதால் இங்கு பலியிட்டு வணங்கும் மருளாளிகளும் உண்டு பால் பொங்கல் செய்து படையலிட்டு வணங்கும் மருளாளிகளும் உண்டு ஒரே நேரத்தில் இருதரப்பினரும் நேர்த்திசெலுத்தி படையலிடும் சந்தர்ப்பத்திலும் எந்தவித குறைபாடும் இல்லாமல் அவரவர் நேர்த்தியை அவரவர் திருப்தியாக செய்து வணங்குவார்கள்.

தல வரலாறு

சித்திரை மாத கடைசி செவ்வாய் இரவு பெருந்திருவிழா. சித்திரை மாத கடைசி செவ்வாய் இரவு பெருந்திருவிழா.

தல சிறப்புகள்

அனைத்து மக்களும் இனபாகுபாடின்றி குலதெய்வ ஆலயமாக ஏற்று வணங்கும் ஆலயம் இது.

Learn More
about
About பெதஂதரணேஷ்வரர்- பெரியநாயகி ஆலயம்

கோயில் அமைப்பு

கட்டுமானம்

பல தலைமுறைகளுக்கு முன் தர்மகர்த்தாவாக இருந்த ரெங்கசாமிபிள்ளை மற்றும் குட்டியாபிள்ளை அவர்களின் தலைமுறையினராலும், மருளாளிகளின் தலைமுறையினராலும், இத்திருக்கோயில் கட்டப்பட்டது.

Read More
சமீப குடமுழுக்கு :

கர வருடம் ஆவணி மாதம் 29-ம் தேதி (15-10-2011) வியாழக்கிழமை தற்போதைய அறங்காவலர் கே. ஆர். ராமலிங்கம்பிள்ளை மற்றும் கோயில் மருளாளிகளால் சிறப்பாக குடமுழுக்கு செய்யப்பட்டது.



Read More
ரக்ஷைமரம்:

வேம்பு ரக்ஷைமரமாக கோயிலின் மத்தியில் உள்ளது. அதில் குழந்தை பேறு வேண்டுவோர் திருமண பாக்யம் வேண்டுவோர் தங்களின் வேண்டுதல்களை ரக்ஷைகளாக கட்டுவார்கள் .



Read More
காலம் :

சரியாக தெரியவில்லை தர்மகர்தாக்களின் தலைமுறையினரை வைத்து கணக்கிட்டால் சுமார் 500 ஆண்டுகள்.

Read More
பூஜை :

தினப்படி ஆராதனைகளும், சித்திரை, ஆடி, கார்த்திகை, தை மாதங்களின் கடைசி செவ்வாய் இரவு புதன் அதிகாலையில் நடக்கும் .

Read More
ஸ்தல விருட்சம் :

வேம்பு அதுவே ரக்ஷை மரமாகவும் உள்ளது.

பலிபீடம் - உண்டு.



Read More
portfolio
உத்தண்டராயர் சன்னிதி

அருள்மிகு உத்தண்டராயர் சன்னிதியில் அருள்மிகு உத்தண்டராயர் புலிவாகனத்தில் எட்டுகரங்களுடன் காட்சி தருகிறார் பெரியநாயகி ஆக்ரோஷகோலத்திலும் பக்கத்தில் வீரன்வடிவில் முருகனும் உத்தண்ராயரின் இருபுறமும் தேவலோக கன்னியர் இருவருடன் இரண்டு பூதகணங்களும் இருந்து அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.

portfolio
நைனார் சன்னிதி

அருள்மிகு நைனார்சுவாமி சன்னிதியில் அருள்மிகு நைனார்சுவாமியுடன் லெக்ஷ்மணன், சீதை, அனுமன், சாமோந்தர் ஆகியோர் உடனுறைந்து அருள்பாலிக்கிறார்கள்.

portfolio
பெதஂதரணேஷ்வரர் சன்னிதி

அருள்மிகு பெதஂதரணேஷ்வரர் சன்னிதியில் அருள்மிகு பெத்தாரணயேசுவரர் இருபுறமும் தேவமாதருடனும் பொம்மி வெள்ளையம்மாளுடனும் அருள்மிகு மதுரைவீரனும், அருள்மிகு வீரனும் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்கள்.

portfolio
பெரியநாயகி சன்னிதி

"போற்றுமருள் நல்கி எமைப் பூரிக்கச் செய்கின்ற ஈற்றலெல்லாம் கொண்டவளே! அன்னையே நூற்றாண்டாய் நற்தேவர்கண்ட நல்லூர் நாயகியே! பொற்பாதம் பற்றுமெமைப் காப்பாய் பரிந்து”!

portfolio
குமாரசுவாமி சன்னிதி

குமாரசுவாமி சன்னிதியில் அருள்மிகு விநாயகர், வள்ளி தேவசேனா சமேத குமாரசுவாமி மற்றும் எழுந்தருளும் விக்ரமாக வள்ளி தேவசேனா சமேத குமாரசுவாமியும் உறைந்து அருள்பாலிக்கிறார்கள்

img

வழிபாடு

பெதஂதரணேஷ்வரர்- பெரியநாயகி ஆலயம்

சிறப்பு பூஜைகள்
சித்திரை மாத கடைசி செவ்வாய் இரவு பெருந்திருவிழா -சித்திரை, ஆடி, கார்த்திகை, தை மாதங்களில் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு புதன்கிழமை காலை அக்கினி கப்பரை திருவிழா ஆவணி மாதம் கும்பாபிஷேக தின விழா காலை சிறப்பு ஹோமம், மஹா அபிஷேகம், அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனை. மாலை குமாரசாமி திருக்கல்யாணம் ஆடி முதல் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை.
எஸ்.சாமிநாதகுருக்கள் :- 9442467891 எஸ்.கணேசகுருக்கள்:- 9677413485
எம்.பாலநாராயணன்:-9865981789 சுப்ரமணியன்:- 9789761089
img

அமைவிடம்

பெதஂதரணேஷ்வரர் - பெரியநாயகி ஆலயம்

மேலூம் ஊர் சிறப்பு :
பக்கத்தில் மிக குறைந்த பரப்புக்குள் அமைந்துள்ள 6 புகழ்பெற்ற சிவாலயங்களின் தரிசனமாகும். பொதுவாக சிவாலயங்கள் நெடுந்தூர இடைவெளியில் முக்கிய இடங்களில் அமைந்துள்ளதைத்தான் நாம் தரிசித்துள்ளோம். ஒரு சிறிய கிராமத்தில் அருகருகே அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒரு பாக்யமாகும். அதில் ஒவ்வொரு கோவிலாக சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.
ஆதிச்சமங்கலம் இந்த கோவில் பெதஂதரணேஷ்வரர் ஆலயத்தின்பக்கத்திலேயே அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 350ஆண்டுகளுக்கு முன் பெருந்தனக்காரர் சின்னப்பாபிள்ளை பரம்பரையினரால் கட்டப்பட்டுள்ளது. புத்திரதோஷ நிவாரண தீர்த்தம் இந்த கோயிலின் தீர்த்தமாகும். இதில் நீராடி ஈஸ்வரனை வழிபட்டால் சகல தோஷமும் நிவர்த்தி அடைந்து குழந்தைபேறு கிட்டும் என நம்மப்படுகிறது.
இந்த ஆலயம் பெதஂதரணேஷ்வரர் ஆலயத்தின் மேற்கே சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கந்தசாமிபிள்ளை வகையறா முன்னோர்களால் சுமார் 300 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மூல விக்ரஹம் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் மூல விக்ரஹம் போன்ற பிரம்மாண்டமான அமைப்புடன் உள்ளது. இந்த ஆலயத்திலுள்ள கற்பக விநாயகரிடம் பக்தர்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளதால் இது கற்பக விநாயகர் ஆலயம் என்றும் ஈஸ்வரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மையிலிருந்து விடுபட விநாயகரால் வழிபட்ட இடம் என்பதால் பிள்ளையார் கோயில் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுவதாக இரண்டு கருத்துக்கள் உண்டு. இந்த ஆலயத்தில் வழிபடுவோர்க்கு இன்னல் நீங்கி சுகம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.

இந்த கோவில் பெத்தாரணயேசுவரர் ஆலயத்தின் மேற்கில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகட்கு முன் தஞ்சையை ஆண்ட மன்னர் வம்சத்தினரால் "பாவா எனும் கௌரவ பட்டம் பெற்ற ஜமீன் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. இந்த கோவிலின் தீர்த்தம் சகலரோக நிவாரண தீர்த்தம் இதில் நீராடி ஈஸ்வரனை வழிபட்டால் சகல ரோகங்களும் நீங்கும்.
இந்த ஆலயம் பெதஂதரணேஷ்வரர் ஆலயத்தின் மேற்கே சுமார் 300 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 1800 ஆண்டுகட்கு முன் இரண்டாம் தலைமுறை இராஜேந்திரர் சோழர்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் தீர்த்தம் ஜாப தோஷ நிவாரண தீர்த்தம். இந்த தீர்த்தத்தில் நீராடி ஈஸ்வரனை பூஜை செய்ததால் காளிகாதேவிக்கு சம்ஹார தோஷம் நீங்கியதாக வரலாறு.
இந்த ஆலயம் பெதஂதரணேஷ்வரர் ஆலயத்தின் தெற்கே சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகட்கு முன் மராட்டிய மன்னர் வம்சத்தினரால் கட்டப்பட்டதாக கூறுவர். இது நாகதோஷ பரிகார ஸ்தலமாகும்.
பரம்பரை அறங்காவலர் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர், கோவில் மருலாளிகள் மற்றும் கிராமவாசிகள், தேவர்கண்டநல்லூர்.
தேவர்கண்டநல்லூர், குளிக்கரை, திருவாரூர் மாவட்டம், 613704.